ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம்.! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வேலைவாய்ப்புதமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் 3,167 பணியிடங்கள்... விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன
கல்விச் செய்திகள்தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 3,167
குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் உள்ளூர் மொழிப் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், கண்டிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டும் நபராகவும் இருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம்.
எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 80% மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் இதில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமுள்ளன.
தமிழ்நாட்டில் மண்டலம் வாரியான அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:
மண்டலம் காலியிடம்
Vellore Division 39
Tuticorin Division 76
Tiruvannamalai Division 129
Tirupattur Division 68
Tirunelveli Division 94
Tiruchirapalli Division 113
Theni Division 65
Thanjavur Division 75
Tambaram Division 111
Sivaganga Division 47
salem west division 76
Salem East Division 95
RMS T Division 5
RMS MA Division 3
RMS M Division 2
RMS CB Division 13
Ramanathapuram Division 77
Pudukkottai Division 74
Pondicherry Division 111
Pollachi Division 51
Pattukottai Division 53
Nilgiris Division 54
Namakkal Division 111
Nagapattinam Division 65
Mayiladuthurai Division 56
Madurai Division 99
Krishnagiri Division 76
Kovilpatti Division 71
Karur Division 55
Karaikudi Division 31
Kumbakonam Division 48
Kanniyakumari Division 73
Kanchipuram Division 87
Erode Division 100
Dindigul Division 74
Cuddalore Division 113
Dharmapuri Division 72
Coimbatore Division 74
Chengalpattu Division 70
Arakkonam Division 73
Srirangam Division 53
விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

குறும்பட போட்டிக்கு மாணவ, மாணவிகளை அழைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்
கல்விச் செய்திகள்
ஜி - 20 மாநாட்டை இந்தியா நடத்துவதையொட்டி, குறும்பட போட்டியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ‘ஜி - 20’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவிகளும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குறும்பட விடியோக்களை பிப். 28-ஆம் தேதிக்குள் இணையவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை
கல்விச் செய்திகள்தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, அதற்கான தரவுகள், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் போ் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்தது.
அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கா்நாடகம், மிஸோரம், சத்தீஸ்கா், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டுள்ளோம். மத்திய அரசு சாா்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னா், அதனை முறையாக குளிா்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவா்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றனா் அவா்கள்.

IIT Madras: இனி இணைய வழியில் B.Ed., படிக்கலாம், ஐஐடி மெட்ராஸின் புதிய அறிவிப்பு!
கல்விச் செய்திகள்
வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம்!
கல்விச் செய்திகள்24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு.
கல்விச் செய்திகள்TNPSC : குரூப் - 4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வலியுறுத்தல்
கல்விச் செய்திகள்
அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு
வேலைவாய்ப்பு
அறிவியல் குறிப்புகள் (அதிகரிப்பு அல்லது குறைப்பு வரிசை)
அறிவியல் குறிப்புகள்
மக்களே இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு..!!
GENERAL NEWS

ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா.? தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்.!
GENERAL NEWS

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
GENERAL NEWS

2003 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.
கல்விச் செய்திகள்ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை!
கல்விச் செய்திகள்ஜனவரி 31 வரை வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியல் வெளியீடு...!
வேலைவாய்ப்புமுதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு
கல்விச் செய்திகள்
என்ன செஞ்சாலும் சுகர் குறையலையா.. காலையில் வெறும் வயிற்றில் வெங்காய ஜூஸ் குடிங்க!
உடல் நலம்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு