Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 17, 2023

என்.எல்.சி நிறுவனத்தில் 295 காலியிடங்கள் - கேட் மதிப்பெண் போதும்

நவரத்னா என்ற சிறப்புத்தகுதி பெற்ற என்.எல்.சி நிறுவனம், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், சுரங்கவியல், கணினி அறிவியல் ஆகியவற்றில் உள்ள 295 பட்டதாரி நிர்வாக பயிற்சியர்களை ( Graduate Executive Trainee - GET) தேர்வு செய்வதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவிவரங்கள்:

என்எல்சி நிறுவனத்தில் உள்ள அனல்மூன் நிலையம் மற்றும் புதுப்பிக்க எரிசக்தி பிரிவின் (Thermal Power stations & Renewable Energy) கீழ் 140 பட்டதாரி நிர்வாக பயிற்சியர் காலியிடங்களும், சுரங்கம் மற்றும் துணை சேவைகள் (Mines & Allied Activities) பிரிவின் கீழ் 155 பட்டதாரி நிர்வாக பயிற்சியர் காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


அடிப்படைத் தகுதிகள்:

2023ம் ஆண்டு GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2023 GATE மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்கள் நியமிக்கிப்படுவார்கள்

விண்ணப்பதாரர் தொடர்புடைய துறைகளில் இளங்கலை (பகுதி நேர/முழு நேர ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 21.12.2023 மாலை 5 மணிக்குள்; அன்றிரவு 11:45 மணிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

தேர்வு முறை: 2023 GATE மதிப்பெண் அடைப்படையிலும், நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடைப்படையிலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு காலியிடத்திற்கும் 6 பேர் வீதம் தேர்ந்தெடுக்குப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

2023 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 80 சதவிகித வெயிட்டேஜூம், நேர்காணல் தேர்வுக்கு 20 சதவிகித வெயிட்டேஜூம் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் இதர தகுதிகள்


வயது வரம்பு: விண்ணப்பதாரர் வயது வரம்பு 01/11/2023 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்

சம்பளம்: தேர்வர்கள் ஓராண்டுக்கு பயிற்சியராக இருப்பார்கள். அப்போது மாத ஊதியமாக ரூ.50,000 முதல் ரூ. 1,60,000 வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்காலம் முடிவடைந்த பிறகு (E-3 Grade )அதிகாரியாக அமர்த்தப்படுவர். அப்போது அவர்களின் மாத ஊதியம் INR. ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 உயர்த்தப்படும். இந்த பணியில் சேருபவர்கள் என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் நிலை வரை பதவி உயர்வு பெற முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 854 ஆகும். பட்டியல் கண்ட பிரிவினர்/ பட்டியல் கண்ட பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் படைவீரர் ஆகியோர் ரூ. 354 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பம் செய்வது எப்படி?

முக்கியமான நாட்கள்: இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. www.nlcindia.in என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது.

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆள்சேர்க்கை அறிவிக்கையை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment