Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

TNPSC பொதுத் தமிழ் வினா விடை - 07

அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்

புதுமைப்பித்தன்
சிறுகதை மன்னன்
மாணிக்க வாசகர்
திருவாதவூரார், அழுது அடியடைந்த அன்பர்
கீ.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை
முத்தமிழ் காவலர்
இராமலிங்கனார்
ஆட்சிமொழி காவலர், நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர்
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
கிருத்துவக் கம்பர்
இரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வர் (இலக்கியம்)
இராஜாஜி
மூதறிஞர்
மு. வரதராசனார்
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
பம்மல் சம்மந்த முதலியார்
தமிழ் நாடகத் தந்தை
சங்கரதாஸ் சுவாமிகள்
நாடகத் தலைமை ஆசிரியர், நாடகத் தமிழ் உலகின் இமயமலை
அறிஞர் அண்ணா
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா
ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் மாப்பசான்
தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி
பாரதிதாசன்
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்
கபிலர்
புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
அழ.வள்ளியப்பா
குழந்தைக் கவிஞர்
சேக்கிழார்
தொண்டர் சீர்பரவுவார், அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார்
கம்பர்
கவிச்சக்கரவர்த்தி, கல்வியிற் பெரியவர், கவிராட்சசன்
பாரதியார்
விடுதலைக்கவி, மகாகவி, தேசியக்கவி, ஷெல்லிதாசன், மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துவுக்கு தந்தை, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை
காமராஜர்
பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
திரு.வி.க
தமிழ்த்தென்றல, உரைநடையின் தந்தை
டி.கே.சண்முகம் சகோதரர்கள்
தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
சுந்தரர்
ஆளுடை நம்பி, வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
அண்ணா
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா
நாச்சினார்க்கினியர்
உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
ஈ.வெ.ரா.ராமசாமி
பகுத்தறிவு பகலவன், பெரியார், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரா்
திருவள்ளுவர்
முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்
எம்.எஸ்.சுப்புலெட்சுமி
இசைக்குயில்
தேவநேயப்பாவாணர்
மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள்
பெருஞ்சித்தரனார்
பாவலர் ஏறு
அருணகிரிநாதர்
சந்தக்கவி
உ.வே.சாமிநாத ஐயர்
தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
பாபாநாசம் சிவன்
தமிழ் தியாகப்பர்
இராபர்ட். டி. நொபிலி
தத்துவ போதக சுவாமி
இராமலிங்க அடிகள்
வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள், சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
திருஞானசம்பந்தர்
இறைவனின் பிள்ளை, தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, இன்தமிழ் ஏசுநாதா்
ம.பொ.சிவஞானம்
சிலம்புச் செல்வர்
வ.உ.சிதம்பரனார்
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
பொ.வே.சோமசுந்தரனார்
பெருமழைப்புலவர்
இளம்பூரணர்
உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
செய்குத் தம்பியார்
தசாவதானி
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
சிறுகதை தந்தை
மு.கதிரேசன் செட்டியார்
பண்டிதமணி, மகோமகோபாத்தியாய
வாணிதாசன்
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த், கவிஞரேறு, பாவலர் மணி
கருமுத்து தியாகராசச்செட்டியார்
கலைத்தந்தை
திருநாவுக்கரசர்
மருள்நீக்கியார், அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், தேசம் உய்ய வந்தவர்
ஞானசம்பந்தர்
ஆளுடையப்பிள்ளை
அகத்தியர்
குறுமுனி
பெரியாழ்வார்
பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
சிவப்பிரகாசர்
கற்பனைக் களஞ்சியம்
இளஞ்சூரியர், முதுசூரியர்
இரட்டைப்புலவர்கள்
சோமசுந்தர பாரதியார்
நாவலர்
ஆண்டாள்
சூடிக்கொடுத்த நாச்சியார், சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி, கோதை
ஆறுமுக நாவலர்
பதிப்புச் செம்மல்
உடுமலை நாராயண கவி
பகுத்தறிவுக் கவிராயர்
வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர்
நம்மாழ்வார்
சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்
இராசா.அண்ணாமலைச் செட்டியார்
தனித்தமிழ் இசைக் காவலர்
வால்டர் ஸ்காட்
உலகச் சிறுகதையின் தந்தை
திருமங்கையாழ்வார்
பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
டி.கே.சி.
ரசிகமணி
சி.பா. ஆதித்தனார்
தமிழர் தந்தை
குலசேகராழ்வார்
கூடலர்கோன், கொல்லிகூவலன்
அஞ்சலையம்மாள்
தென்நாட்டின் ஜான்சிராணி
நம்பியாண்டார் நம்பி
தமிழ் வியாசர்
அம்புஜத்தம்மாள்
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
திருமழிசையாழ்வார்
திராவிட ஆச்சாரியார்
கா. அப்பாத்துரையார்
பன்மொழிப்புலவர்
கந்தசாமி
நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
தொண்டரடிப் பொடியாழ்வார்
விப்பிரநாராயணன்
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திவ்விய கவி
சீத்தலைச் சாத்தனார்
தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன்
திருமூலர்
முதல் சித்தர்
பரிதிமாற்கலைஞர்
திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
ஒளவையார்
தமிழ் மூதாட்டி
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
புகழேந்தி
வெண்பாவிற் புகழேந்தி
திரிகூட ராசப்பக் கவிராயர்
திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
திருத்தக்கத் தேவர்
தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
நீதியரசர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
மகாவித்வான்
அநுத்தமா
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
அரசஞ்சண்முகனார்
நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர்
வா.செ.குழந்தைசாமி
குலோத்துங்கன்
எம்.ஜி.ராமச்சந்திரன்
மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி
வி.முனுசாமி
திருக்குறளார்
மகாத்மா காந்தியடிகள்
உலக உத்தமர்
வைரமுத்து
கவிப்பேரரசு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
தேசியம் காத்தச் செம்மல்
ஸ்ரீவேணுகோபாலன்
புஷ்பா தங்கதுரை
காமராஜர்
காலா காந்தி, படிக்காத மேதை
வேதரத்தினம் பிள்ளை
சர்தார்
பாலசுப்ரமணியம்
சிற்பி
மு. கருணாநிதி
கலைஞர்
கால்டுவெல்
ஒப்பிலக்கணத் தந்தை
நா. காமராசன்
வானம்பாடிக் கவிஞர்
அப்துல் ரகுமான்
கவிக்கோ
என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர்
ஆத்மாநாம்
எஸ்.கே.மதுசூதன்
எம்.ஆர்.ராதா
நடிகவேள்
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை கவிராஜன்
செய்குத்தம்பி பாவலர்
கற்பனைக் களஞ்சியம்
கல்கி
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
திரு.வி.க.
தமிழ் உரைநடையின் தந்தை
கண்ணதாசன்
காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
சுரதா
உவமைக் கவிஞர்
சுஜாதா
தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
வேங்கடரமணி
தென்னாட்டுத் தாகூர்
குணங்குடிமஸ்தான்
இஸ்லாமியத் தாயுமானவா்
சரோஜினி நாயுடு
கவிக்குயில்
மாதவய்யர்
கோணக் கோபாலன்
தொண்டரடிப் பொடியாழ்வார்
விபர நாராயணா்
கி.வா. ஜெகநாதன்
தமிழறிஞர்
மறைமலை அடிகளார்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
சுந்தர ராமசாமி
பசுவய்யா
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
ம.பொ.சிவஞானம்
சிலம்புச் செல்வர்

No comments:

Post a Comment