Join THAMIZHKADAL WhatsApp Groups
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
நெய் சர்க்கரை
முந்திரி பருப்பு
செய்முறை
*இன்ஸ்டன்ட் அல்வா செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் நெய் ஊற்றவும்.
*நெய் உருகியதும் 1/4 கப் அளவு முந்திரிப்பருப்பு சேர்த்து அதனை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரி பருப்பை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
*பிறகு இதே நெய்யில் 1/2 கப் கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும்.
*அடுப்பை மிதமான தீயில் வைத்து கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரையில் வறுத்துக் கொள்ளுங்கள்.
*மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு அளந்த அதே கப்பில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: லேட்-நைட்ல வொர்க்அவுட் பண்றது நல்லதா… கெட்டதா… ஆராஞ்சு பார்த்திடுவோமா!!!
*கோதுமை மாவு வறுபட்டதும் இந்த தண்ணீரில் ஒரு கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள்.
*மாவு ஓரளவு வெந்த பிறகு மீதம் இருக்கக்கூடிய தண்ணீரையும் சேர்த்து மாவை கிளறவும்.
*மாவு நன்றாக வெந்து திரண்டு வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
*கடாயில் ஒட்டாமல் மாவு திரண்டு வந்த பிறகு 2 ஸ்பூன் அளவு சர்க்கரையை கேரமலைஸ் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
*இது நாம் செய்யக்கூடிய அல்வாவிற்கு நிறத்தையும், கூடுதல் ஃபிளேவரையும் அளிக்கும்.
*பின்னர் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து 15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும்.
*இப்போது நாம் வறுத்து வைத்த முந்திரி மற்றும் மேலும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
*ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை இதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
*அவ்வளவுதான் நம்முடைய சுவையான இன்ஸ்டன்ட் அல்வா இப்போது தயார்.