IMPORTANT LINKS

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, May 1, 2025

30 - வகையான பொடி ரெசிபி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
குழம்புப் பொடி
மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும். தேவையான பொருட்கள் தனியா- ஒன்றரை கிலோ வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ கடலைப் பருப்பு- 100 கிராம் மிளகு-50 கிராம் சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 1 மேசைக்கரண்டி அரிசி- 1 மேசைக்கரண்டி சோம்பு- 1 மேசைக்கரண்டி செய்முறை அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும்
 
 
ரசம் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் துவரம் பருப்பு - ½ கப் காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 15 சீரகம் - 1/4 கப் கருவேப்பில்லை - 10 இலை பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி வெந்தயம் - ½ தே.கரண்டி செய்முறை முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
 
ரசப் பொடி

தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி.
 
கறிப் பொடி

தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும்
 
திடீர் சம்பார் பொடி

தேவையான பொருட்கள் தேவையானப் பொருட்கள் 1) காய்ந்த மிளகாய் - 25 2) தனியா - 1 கப் 3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு செய்முறை ஒரு வெறும் வானலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

திடீர் பூண்டு இட்லி பொடி

இட்லி பொடி இல்லாத நேரத்தில் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். தேவையான பொருட்கள் பூண்டு - 10 பல் தோலுடன் காய்ந்த மிளகாய் - 5 உப்பு - 1 தே.கரண்டி செய்முறை பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 
கிட்ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் பொட்டு கடலை ( ஓடைத்த் கடலை) - 1 கப் பூண்டு -3 பல் தோலுடன் உப்பு - 1/2 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,பூண்டு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ,எளிதில் தயாரிக்க கூடிய கிட்ஸ் இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். -------------------------------------------------------------
சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் ஓமம் - 1 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன் நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன் ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன் கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ. தேவையான பொருட்கள் 1. மிளகு - 16 2. பட்டை - 1 இன்ச் 3. லவங்கம் - 4 4. ஏலக்காய் - 4 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி 3. பூண்டு - 3 பல் 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 6. கறிவேப்பிலை - கொஞ்சம் 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி 8. உப்பு செய்முறை எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும். வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி உப்பு - 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கப் காஞ்ச மிளகாய் - நன்கு பெருங்கய்ம் - ஒரு பின்ச் உப்பு - ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள் -------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப் பொட்டு கடலை - முக்கால் கப் கடலை பருப்பு - முக்கால் கப் தனியா - முக்கால் கப் பெருங்காயம் - இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் - இருபது கிராம்பு - பத்து பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி ஏலகாய் - பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம் ---------------------------------------------------------------
ஜலீலா'ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் - கால் கப் எள் - இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை - கால் கப் கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி உப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது. ------------------------------------------------------------------------- -கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு - 100g காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 பூண்டு - 10 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -- 1 கப் வத்தல் -- 1 கப் பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 2 இனுக்கு உப்பு -- தே.அ வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது) செய்முறை வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள் உளுந்து பருப்பு - அரை கப் கடலை பருப்பு - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது) வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது) கருவேப்பிளை - கால் கப் உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு பூண்டு - ஒன்று செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும் ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் -------------------------------3- வகையான ரசப்பொடி.....
உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - கால் கப்
* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்........

ஆந்திரா ரசப்பொடி
தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 2 கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - அரை கப்
* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார்... ஓம்

மைசூர் ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்....

வற்றல்குழம்புப்பொடி செய்வது எப்படி...
தேவையானவை:
தனியா – கால் கிலோ,
காய்ந்த மிளகாய் – அரை கிலோ,
கடலைப்-பருப்பு – கால் கப்,
உளுத்தம்-பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – கால் கப்,
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
வேர்க்-கடலை – ஒரு டேபிள்-ஸ்பூன்.
செய்முறை:
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து உப-யோகிக்கவும். வற்றல்குழம்பு, கெட்டிக் குழம்புக்கு போட்டால் சுவை பிரமாத-மாக இருக்கும்.
குழம்பு கொதிக்கும் சமயம் வேர்க்-கடலையை வறுத்துப் போட்டாலும் தனி ருசி தரும்.

பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை....
இந்த பிரியாணி மசாலா செய்ய நமக்கு மூன்றே பொருள் தான் தேவை. அது பட்டை கிராம்பு ஏலக்காய் இவைகள் தான். இவற்றை வாங்கும் போதே தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காயில் விதைகள் அதிகமாக இருப்பதாக வாங்க வேண்டும்.
அதே போல் பட்டையும் சாயம் பூசியது தற்போது விற்பனையில் உள்ளது. அதை வாங்கும் போதே சரி பார்த்து வாங்குங்கள். கிராம்பின் மேலே இருக்கும் கொம்பு போன்ற பகுதி உடையாமல் இருப்பதாக பார்த்து வாங்குங்கள். இவற்றையெல்லாம் தரமாக பார்த்து வாங்கினாலே சுவை பிரமாதமாக இருக்கும்.
மசாலா பொருட்களின் அளவு
கிராம்பு – 20 கிராம்,
ஏலக்காய் – 30, கிராம்
பட்டை 50 கிராம்.
இதில் முதலில் ஏலக்காவை போட்டு அத்துடன் ஒன்னரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்ப்பதன் மூலம் ஏலக்காய் நன்றாக அரைபடுவதுடன், சர்க்கரை சுவையுடன் சேர்க்கும் போது பிரியாணியும் நன்றாக இருக்கும். ஏலக்காவை நல்ல ஃபைன் பவுடராக அரைக்க வேண்டும்.
அடுத்ததாக பட்டையை சேர்க்க வேண்டும். பட்டையை நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கிராம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் கல் உப்பை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த மசாலாவை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். டப்பாவில் வைக்கும் போது ஒரு பாலீத்தீன் கவரில் போட்டு அதை கட்டி அதன் பிறகு வையுங்கள். இப்படி வைத்து எடுப்பதனால் இதன் மனம் வெகு நாட்கள் வரை குறையாமல் இருக்கும். உப்பு சேர்த்து இருப்பதால் மசாலா சீக்கிரத்தில் கெட்டும் போகாது.
நீங்கள் ஒரு கிலோ அளவிற்கு பிரியாணி செய்வதாக இருந்தால் அரைத்த இந்த மசாலாவில் இருந்து இரண்டு ஸ்பூன் மட்டும் போட்டாலே போதும். வேறு எந்த வித மசாலாக்களையும் சேர்க்க வேண்டாம் சுவை அட்டகாசமாக இருக்கும் மனமும் ஆளை தூக்கும்.
அதுமட்டுமின்றி இந்த மசாலாவை மற்ற அசைவ வகைகள் சமைக்கும் போதும் சேர்த்து சபைக்கு எல்லாம் அதேபோல் சைவ குருமா வறுவல்கள் செய்யும் பொழுது இதை சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். அளவு மட்டும் கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூனுக்கு மேல் சேர்க்க வேண்டாம்.

பூண்டு கருவேப்பிலை பொடி செய்வது எப்படி.....
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு – 1/2 கப்
கருப்பு உளுந்து – 1/2 கப்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
வேர்க்கடலை – 1/2 கப்
கருப்பு எள் – 1/4 கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
கட்டி பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 ,
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் கருவேப்பிலையை நன்றாக உருவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் நல்லெண்ணையை சேர்த்தும் வருக்கலாம். கடலைப்பருப்பு நன்றாக வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி விடுங்கள். அடுத்ததாக கருப்பு உளுந்தை சேர்க்க வேண்டும். அதையும் நன்றாக பொன்னிறமாக வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளியை கடாயில் சேர்த்து அதையும் நன்றாக வறுத்து அதையும் தட்டில் சேர்த்து விடுங்கள். அடுத்ததாக வேர்க்கடலையை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு எள், சீரகம், மிளகு இவற்றையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் உடன் பொடியாக நுணுக்கிய கட்டி பெருங்காயத் துளையும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு சிறிது நல்லெண்ணெய் ஊற்றிய அதில் 2 முழு பூண்டுகளை பொடி பொடியாக நறுக்கி அதில் சேர்த்து குறைந்த தீயில் வைத்து சிவக்க வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கருவேப்பிலையை அந்த கடாயில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் துளை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கருவேப்பிலையை கையில் தொட்டவுடன் நொறுங்கும் அளவு பதம் வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்து அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இவை அனைத்தும் நன்றாக ஆரட்டும். மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் பருப்பு பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதே மிக்ஸி ஜாரில் கருவேப்பிலையை சேர்த்து பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பருப்பு பொடி அதில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒருமுறை மட்டும் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவேப்பிலை பொடி தயாராகிவிட்டது.
இந்த பொடியை நாம் அப்படியே இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக் கொள்ளலாம். இந்த பொடியுடன் தேங்காய் துருவலை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்தால் கருவேப்பிலை துவையல் தயாராகிவிடும். மேலும் புளி சாதம் கிளரும் பொழுது இந்த பொடியையும் சேர்த்து கலந்தால் அந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.