Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, August 20, 2024

வீடு விற்பனையில் புதிய ரூல்ஸை நடைமுறைப்படுத்திய தமிழக அரசு... !


வீடு விற்பனை பத்திரப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டி மதிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றுள் நிலத்திற்கான மதிப்பு பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். "சந்தை மதிப்பின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவுக்கட்டணத்தினை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு வழிகாட்டி மதிப்பில் தேவையான மாற்றங்களை பரிசீலனை செய்ய குழுவை நியமனம் செய்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதிவுக்கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பதிவுக்கட்டண குறைப்பு நடைமுறைக்கு வந்தது.

: சுதந்திர தின விழா நிகழ்வின்போது தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதா? - வெளியான வைரல் வீடியோவின் உண்மை என்ன?

இதனை எதிர்த்து கட்டுமான சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் கருத்துகளை கேட்டு அதனடிப்படையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழிகாட்டி மதிப்பு கடந்த மாதம் திருத்தி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கான மதிப்பை தனியாக கணக்கிடுவது அவசியம். குறிப்பாக, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வெளியிடும் மதிப்புகள் அடிப்படையில், கட்டடங்கள் மதிப்பிடப்படும். அந்த வகையில், 2024 - 25ம் ஆண்டுக்கான கட்டடங்களுக்கான மதிப்பு விபரங்களை, பொதுப்பணி துறை தற்போது வெளியிட்டுள்ளது.

ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய மதிப்புகள் அடிப்படையில் பத்திரங்கள் இருக்க வேண்டும் எனவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய வழிகாட்டி நடைமுறைகள்:

பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய்; இரண்டாம் தளம், 10,695 ரூபாய்; 3வது தளம், 10,870 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரைதளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

: எல்.கே.ஜி கட்டணம் ரூ.3.7 லட்சமா..? இனி பணம் இருந்தால்தான் படிக்க முடியுமா? - வைரலாகும் பதிவு!

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும், 10.7 சதுர அடிக்கு, 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோன்று கட்டுமான பொருட்கள் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டட மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த மதிப்பு, 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.