Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

புதினம் வினா விடைகள்

1. தமிழின் முதல் புதினம் யாது? பிரதாபமுதலியார் சரித்திரம்
2. பிரதபமுதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்? மாயூரம் வேதநாயகம் பிள்ளை
3. பிரதாபமுதலியார் சரித்திரம் எந்த ஆண்டு வெளிவந்தது? 1879
4. ஆதியூர் அவதானி சரித்திரத்தின் ஆசிரியர் யார்? வித்துவான் சேஷய்யங்கார்
5. ஆதியூர் அவதானி சரித்திரம் வெளிவந்த ஆண்டு யாது? 1875
6. தமிழ்ப் புதினத்தின் தந்தை யார்? பிரதாபமுதலியார் சரித்திரம்
7. வேதநாயகம் பிள்ளை இயற்றிய மற்றோர் புதினம் யாது? சுகுணசுந்தரி சரித்திரம்
8. கமலாம்பாள் சரித்திரத்தை இயற்றியவர்? இராஜம் ஐயர்
9. கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்த ஆண்டு? 1896
10.பத்மாவதி சரித்திரத்தின் ஆசிரியர் யார்? அ. மாதவையா
11. பத்மாவதி சரித்திரம் வெளிவந்த ஆண்டு? 1898
12. புதின உத்திகள் அமைந்த முதல் தமிழ்ப் புதினம் யாது? கமலாம்பாள் சரித்திரம்
13. பிரேமகலாவத்யத்தின் ஆசிரியர் யார்? குருசாமி சர்மா
14. நடேசசாஸ்திரி இயற்றிய புதினங்கள் யாவை? தீனதயாளு, திக்கற்ற இருகுழந்தைகள்
15. விஜயமாரத்தாணடன் என்னும புதினத்தை இயற்றியவர் யார்? அ.மாதவையா
16. வில்லியம் பொண்ணுசாமி இயற்றிய புதினங்கள் யாவை? கமலாஷி, சிவகுமரன்
17. ஆரணி குப்புசாமி முதலியார் இயற்றிய துப்பரியும் புதினங்கள் எத்தனை? 75
18. ஆரணி குப்புசாமி இயற்றிய இரத்தினபுரி ரகசியத்தின் பாகங்கள் எத்தனை? 9
19. ஆரணி குப்புசாமியின் குறிப்பிடத்தகுந்த புதினங்கள் யாவை? இரத்தினபுரி இரகசியம், தபால் கொள்ளைக்காரன், மஞ்சள் அறையின் மர்மம்
20. வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் இயற்றிய துப்பறியும் புதினங்கள் யாவை? மேனகா, கும்பகோணம் வக்கீல், பாலா மணி அல்லது பாக்தாத்திருடன்
21. ஜே.ஆர். ரங்கராஜு இயற்றிய துப்பறியும் புதினங்கள் யாவை? சந்திர காந்தா, இராஜாம்பாள், மோகன சுந்தரம்
22. ஜே.ஆர். ரங்கராஜு படைப்புக்களில் வரும் துப்பறியும் கதாப்பாத்திரம்? துப்பறியும் கோவிந்தன்
23. கோதை நாயகி அம்மாள் நடத்திய இதழ் யாது? ஜெகன் மோகினி
24. நாவல் ராணி யார்? கோதை நாயகி அம்மாள்
25. கோதை நாயகியம்மாளின் குறிப்பிடத்தகுந்த புதினங்கள் யாவை? கிழக்கு வெளுத்தது, புனித பவனம், தைரிய லட்சுமி
26. கோதை நாயகி அம்மாளின் மொத்தப் புதினங்கள் யாவை? 115
27. துப்பறியும் சாம்புவின் ஆசிரியர் - தேவன்
28. சங்கர் லால் புதினத்தை இயற்றியவர்- தமிழ்வாணன்
29. கனேஷ் வசந்த் புதின ஆசிரியர் - சுஜாதா

No comments:

Post a Comment