Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 20, 2024

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்
    விடை: அத்துமீறல்
  • அச்சில் வார்த்தாற் போல்
    விடை: உண்மைத் தன்மை, ஒரே சீராக
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்
    விடை: கவனம்
  • அரை கிணறு தாண்டியவன் போல்
    விடை: ஆபத்து
  • இடி விழுந்த மரம் போல்
    விடை: வேதனை
  • உமையும், சிவனும் போல்
    விடை: நெருக்கம், நட்பு
  • ஊமை கண்ட கனவு போல்
    விடை: தவிப்பு, கூற இயலாமை
  • ஏழை பெற்ற செல்வம் போல்
    விடை: மகிழ்ச்சி
  • கயிரற்ற பட்டம் போல்
    விடை: தவித்தல், வேதனை
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்
    விடை: துன்பம், வேதனை
  • தொட்டனை தூறும் மணற்கேணி
    விடை: அறிவு
  • உடுக்கை இழந்தவன் கைபோல்
    விடை: நட்பு, உதவுதல் (நட்புக்கு உதவுபவன்)
  • நீரின்றி அமையாது உலகெனின்
    விடை: ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • தோன்றின் புகழோடு தோன்றுக
    விடை: தோன்றாமை நன்று
  • வரையா மரபின் மாரி போல்
    விடை: கொடுக்கும் தன்மை
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்
    விடை: எளிதில் வெல்லுதல்
  • ஒருமையுள் ஆமை போல்
    விடை: அடக்கம்
  • ஊருணி நீர் நிறைதல்
    விடை: செல்வம்
  • மருந்தாகி தப்பா மரம்
    விடை: தீர்த்து வைத்தல்
  • செல்வற்கே செல்வம் தகைத்து
    விடை: அடக்கம்
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல்
    விடை: சிதறிப்போதல்
  • மடவார் மனம் போல்
    விடை: மறைந்தனர்
  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல்
    விடை: பொறுமை, பொறுத்தல்
  • அத்தி பூத்தாற் போல்
    விடை: எப்பொழுதாவது, அறிய செல்வம்
  • அனலில் இட்ட மெழுகு போல்
    விடை: வருத்தம், துன்பம்
  • அலை ஓய்ந்த கடல் போல்
    விடை: அமைதி, அடக்கம்
  • அழகுக்கு அழகு செய்வது போல்
    விடை: மேன்மை
  • அடியற்ற மரம் போல்
    விடை: துன்பம், வீழ்ச்சி, விழுதல், சோகம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல்
    விடை: துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல்
    விடை: அச்சம், மருட்சி, துன்பம்
  • இழவு காத்த கிளி போல்
    விடை: ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உயிரும் உடம்பும் போல்
    விடை: ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல்
    விடை: தெளிவு
  • ஊசியும் நூலும் போல்
    விடை: நெருக்கம், உறவு
  • எலியும் பூனையும் போல்
    விடை: பகை, விரோதம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல்
    விடை: வேதனையைத் தூண்டுதல்
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்
    விடை: வெகுளித்தனம், அறியாமை
  • கல்லுப்பிள்ளையார் போல்
    விடை: உறுதி, திடம்
  • சுதந்திர பறவை போல்
    விடை: மகிழ்ச்சி, ஆனந்தம்
  • கடல் மடை திறந்தாற் போல்
    விடை: விரைவு, வேகம், விரைவாக வெளியேறுதல்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல்
    விடை: பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல்
    விடை: மனவருத்தம், கலக்கம்
  • காட்டாற்று ஊர் போல்
    விடை: அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல்
    விடை: அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்
    விடை: அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குன்று முட்டிய குருவி போல்
    விடை: வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • குட்டி போட்ட பூனை போல்
    விடை: பதட்டம், அழிவு, துன்பம்
  • சாயம் போன சேலை போல்
    விடை: பயனின்மை
  • சூரியனை கண்ட பணி போல்
    விடை: மறைவு, ஓட்டம்
  • தாயைக் கண்ட சேயைப் போல
    விடை: மகிழ்ச்சி
  • இலைமறை காய் போல்
    விடை: மறைபொருள்
  • மழைமுகம் காணாப் பயிர் போல
    விடை: வாட்டம்
  • விழலுக்கு இறைத்த நீர் போல
    விடை: பயனற்றது
  • சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல
    விடை: மிக்க மகிழ்வு
  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
    விடை: மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
  • இணருழந்தும் நாறா மலரனையார்
    விடை: விரித்துரைக்க இயலாதவர்
  • குந்தித் தின்றால் குன்றும் மாளும்
    விடை: சோம்பல்
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
    விடை: அறிவற்ற தன்மை
  • வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல
    விடை: நன்றியின்மை
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
    விடை: சான்றாண்மை
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
    விடை: குடிபிறப்பின் சிறப்பு
  • அனலில் விழுந்த புழுப்போல
    விடை: தவிர்ப்பு
  • கண்ணைக் காக்கும் இமை போல
    விடை: பாதுகாப்பு
  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை
    விடை: நிலையாமை
  • உமி குற்றிக் கைவருந்தல் போல
    விடை: பயனற்ற செயல்
  • பல துளி பெருவெள்ளம்
    விடை: சேமிப்பு
  • நத்தைக்குள் முத்துப் போல
    விடை: மேன்மை
  • பூவோடு சேர்ந்த நார் போல
    விடை: உயர்வு
  • நாண் அறுந்த வில் போல
    விடை: பயனின்மை
  • மேகம் கண்ட மயில் போல
    விடை: மகிழ்ச்சி
  • சிறகு இழந்த பறவை போல
    விடை: கொடுமை
  • மழை காணாப் பயிர் போல
    விடை: வறட்சி, வாட்டம் அதிகப்படுத்துதல்
  • நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம்
    விடை: நாலடியார்
  • இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சீவக சிந்தாமணி
  • திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: பெரியபுராணம்
  • இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
  • வள்ளலார் என்று போற்றப்படுபவர்
    விடை: இராமலிங்க அடிகளார்
  • விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர்
    விடை: கம்பர்
  • காராண்மை போல ஒழுகுதல்
    விடை: வள்ளல் தன்மை
  • நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
    விடை: துன்பம்
  • புதையல் காத்த பூதம் போல
    விடை: பயனின்மை
  • தாமரை இலை தண்ணீர் போல
    விடை: பற்றற்றது
  • பால்மனம் மாறா குழந்தை போல
    விடை: வெகுளி
  • இடியோசை கேட்ட நாகம் போல
    விடை: அச்சம், மிரட்சி
  • புலி சேர்ந்து போகிய கல்லனை போல
    விடை: வயிறு
  • சிப்பிக்குள் முத்து போல
    விடை: மேன்மை
  • உமிகுற்றி கை வருந்தல் போல
    விடை: பயனற்ற சொல்
  • நீரும் நெருப்பும் போல
    விடை: விலகுதல்
  • வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    விடை: முயற்சிக்கேற்ற பலன்
  • எட்டாப்பழம் புளித்தது போல
    விடை: ஏமாற்றம், விலகுதல்
  • கடன்பட்டவர் நெஞ்சம் போல
    விடை: வேதனை
  • நவில்தோறும் நூல் நயம்போல
    விடை: பண்பாளரின் தொகுப்பு
  • அன்றளர்ந்த தாமரை போல
    விடை: சிரித்த முகம்
  • பகலவனைக் கண்ட பனி போல
    விடை: நீங்குதல், துன்பம் நீங்கிற்று
  • குன்றேறி யானை போர் கண்டது போல
    விடை: செல்வத்தின் சிறப்பு
  • கனியிருப்ப காய்கவர்ந்தற்று
    விடை: இன்னா சொல்
  • சிறுதுளி பெரு வெள்ளம்
    விடை: சேமிப்பு
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
    விடை: பாசம், பந்தம்
  • நகமும் சதையும் போல
    விடை: ஒற்றுமை
  • நீர் மேல் எழுத்து போல
    விடை: நிலையற்ற தன்மை
  • செல்லரித்த நூலை போல
    விடை: பயனின்மை
  • வேலியே பயிரை மேய்ந்தது போல
    விடை: நம்பிக்கை துரோகம்
  • செவிடன் காதில் ஊதிய சங்கு போல
    விடை: பயனற்றது
  • மதில் மேல் பூனை போல
    விடை: முடிவெடுக்காத நிலை
  • பசுத்தோல் போர்த்திய புலி
    விடை: வஞ்சகம்
  • குரங்கு கையில் பூமாலை போல
    விடை: பயனற்றது
  • நீறு பூத்த நெருப்பு போல
    விடை: பொய்த்தோற்றம்
  • இலைமறை காளிணி போல
    விடை: மறைபொருள்
  • பசுமரத்தாணி போல
    விடை: ஆழமாக பதித்தல்
  • நாய் பெற்ற தெங்கப்பழம்
    விடை: அனுபவிக்க தெரியாமை
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
    விடை: துன்பத்தை
  • திருடனுக்கு தேள் கொட்டியது போல
    விடை: தவிப்பு
  • No comments:

    Post a Comment