Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 30, 2024

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 19

21. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - அப்துல் நேற்று வந்தான்.

 

(A) பிற வினைத்தொடர்

(B) உணர்ச்சி தொடர்

(C) தன்வினைத் தொடர்

(D) செய்வினைத் தொடர்

 

22. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - “கல்வியில் பெரியவர் கம்பர்”

 

(A) கல்வியில் புகழ் பெற்றவர் யார்?

(B) கல்வியில் சிறந்தவர் யார்?

(C) கவிதையில் பெரியவர் யார்?

(D) கல்வியில் பெரியவர் யார்?

 

23. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் - விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டி

 

(A) விருதுநகரின் முந்தைய பெயர் என்ன?

(B) விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டியா?

(C) விருதுநகர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(D) விருதுநகரும் விருதுப்பட்டியும் ஒன்றா?

 

24. இரு வினைகளின் வேறுபாடு அறிந்து தவறான தொடரைத் தெரிவு செய்க -  நீங்கு – நீக்கு

 

(A) பெயரை நீக்கியவுடன் பள்ளியை விட்டு நீங்கு

(B) இக்குழுவை விட்டு நான் நீங்க வேண்டுமானால் என் பெயரை நீக்கு

(C) என் பெயரை நீக்க நினைத்தால் நீங்கு

(D) தவறான பதிவுகள் நீங்க வேண்டுமென்று நினைத்து நீக்கி விட்டேன்

 

25. கீழ்கண்ட வினைகளின் பொருள் வேறுபாடு அறிக - சேர்ந்து, சேர்த்து

 

(A) ஒன்று சேர்ந்து வீட்டினைக் கட்டினர்

(B) அனைவரையும் சேர்த்து கல்வியை புகட்டினர்

(C) அனைவரும் ஒன்று சேர்ந்து சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்

(D) சேர்த்து வைத்த சொத்து வீண் போகாது

 

26. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக - புதைந்து, புதைத்து

 

(A) ரவி மண்ணில் புதைந்தப் பொருளை புதைத்து வைத்தான்

(B) புதைந்தப் பொருளை மறைத்து வைத்தல்

(C) புதையலைக் கண்டு மகிழ்ந்தான்

(D) ரவி புதைத்தப் புதையலை மறந்தான்

 

27. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக

 

(A) பெண்கள் கல்வியும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார் கம்பர் விருந்தும், ஈகையும்,

(B) கம்பர் குறிப்பிட்டுள்ளார் கல்வியும், செல்வமும் பெண்கள் பெற்ற ஈகையும், விருந்தும் செய்வதாக

(C) செல்வமும், விருந்தும் பெற்ற பெண்கள் கல்வியும் ஈகையும் பெண்கள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார் கம்பர்

(D) கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

 

28. பொருத்தமான காலம் அமைத்தல் - சரியான தொடரைத் தேர்ந்தெடு

 

(A) பாடல் பாடினான்  (இறந்த காலம்)

(B) பாடல் பாடுகிறான்  (எதிர் காலம்)

(C) பாடல் பாடுவான் (நிகழ் காலம் )

(D) பாடல் பாடுகிறார்கள் (இறந்த காலம்)

29. அகர வரிசைப்படி கீழ்கண்ட சொற்களை சீர் செய்க - காண், கொல், கிளி, கீரி, குடுவை, கேள்வி

 

(A) காண், கிளி, கீரி, குடுவை, கேள்வி, கொல்

(B) கொல், கேள்வி, குடுவை, கீரி, கிளி, காண்

(C) கீரி, குடுவை, கேள்வி, கிளி, காண், கொல்

(D) கிளி, குடுவை, கீரி, கேள்வி, கொல், காண்

 

30. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க - (தலை)

 

(A) உழந்தும் உரலே _______

(B) உழந்தும் உலவே _______

(C) உழந்தும் உறவே _________

(D) உழந்தும் உழவே ________

 

31. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (தொடுதல்)

 

(A) காற்றின் மெல்லிய _________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது

(B) கைகளின் நேர்த்தியான _________ பூக்களை மாலையாக்குகிறது.

(C) சூடான பொருளை கையால் _________ இருக்க வேண்டும்

(D)  __________  சுருங்கி’ என்பது ஒருவகைத் தாவரம்

 

32. சரியான இணைப்புச் சொல் தேர்க: ( நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும், துன்பப்பட நேரிடும்.)

 

(A) ஏனெனில்

(B) அதனால்

(C) இல்லையென்றால்

(D) மேலும்

 

33. சரியான இணைப்புச் சொல் தருக – (அலுவலகப் பணிகாரணமாக வெளியூர் சென்ற என் தந்தை ஊர் திரும்ப ______ இரண்டு நாட்கள் ஆகும் என்றார்.)

 

(A) மேலும்

(B) அதனால்

(C) இல்லையெனில்

(D) ஏனெனில்

 

34. இணைப்புச் சொல் தருக. ( செல்வத்தின் பயன் ஈதல் ________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.)

 

(A) எனவே

(B) இல்லையென்றால்

(C) மேலும்

(D) அதுபோல

 

35. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு. ( மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு __?)

 

(A) யார்?

(B) ஏன்?

(C) யாது?

(D) யாவை?

 

36. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு (ஆழ்வார்கள் ________ பேர்?)

 

(A) எத்துணை

(B) எத்தனை

(C) எப்போது

(D) எப்பொழுது

 

37. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. (“ஆத்திசூடியின் ஆசிரியர் ________ ?’’)

 

(A) எப்படி

(B) எது

(C) ஏன்

(D) யார்

 

38. பொருத்தமான காலம் அமைத்தல் (‘படி’ என்னும் சொல்லின் நிகழ்காலத்தைத் தேர்ந்தெடு)

 

(A) படித்தான்

(B) படிப்பான்

(C) படிப்பாள்

(D) படிக்கிறான்

 

39. வழுஉச் சொல்லற்றத் தொடர் எது ?

 

(A) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னந்தோட்டம் என்பர்

(B) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னந்தோப்பு என்பர்

(C) தென்னை மரங்கள் தென்னங்காடு என்பர்

(D) தென்னை மரங்கள் உள்ள பகுதி தென்னங்கூட்டம் என்பர்

 

40. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல் - பொருத்துக

 

(a) கண்          1. மழை

(b) பொன்        2. தேன்

(c) மலை         3. விலங்கு

(d) வான்         4. மணி

 

(A)       1          2          3          4

(B)       4          3          2          1

(C)       1         3          2          4

(D)       4          1          2          3

No comments:

Post a Comment