Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

சிற்றிலக்கியம் வினா விடைகள் - 01

  1. அந்தாதி என்றால் என்ன? அந்தத்தை ஆதியாகத் தொடுப்பது. ஒரு பாடலின் இறுதி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்தப் பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவது அந்தாதி ஆகும்.
  2. அந்தாதி என்ன பாவால் பாடப்படும்? வெண்பா, கலித்துறை
  3. "அந்தம் முதலா தொடுப்பது அந்தாதி" - என்று குறிக்கும் நூல் எது? யாப்பருங்கலக் காரிகை
  4. "வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில்/ பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே" - என்று கூறும் நூல் யாது? பன்னிருபாட்டியல்
  5. அந்தாதி இலக்கிய முன்னோடியான சங்க இலக்கியம் யாது? ஐங்குறுநூற்று தொண்டிப்பத்து, பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்து
  6. முதல் அந்தாதி இலக்கியம் எது? அற்புதத் திருவந்தாதி
  7. அற்புதத் திருவந்தாதி என்ற நூலின் ஆசிரியர் யார்? காரைக்காலம்மையார்
  8. பொய்கையாழ்வார் பாடிய அந்தாதி - முதல் திருவந்தாதி
  9. பூதத்தாழ்வார் பாடிய அந்தாதி - இரண்டாம் திருவந்தாதி
  10. பேயாழ்வார் பாடிய அந்தாதி - மூன்றாம் திருவந்தாதி
  11. நம்பியாண்டார் பாடிய அந்தாதி - திருத்தொண்டர் திருவந்தாதி
  12. கம்பர் பாடிய அந்தாதி - சடகோபரந்தாதி
  13. அபிராமிபட்டர் பாடிய அந்தாதி - அபிராமி அந்தாதி
  14. வெண்பா அந்தாதி என்றால் என்ன? 100 வெண்பாக்களால் ஆன அந்தாதி
  15. கலித்துறை அந்தாதி என்றால் என்ன? 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.
  16. பதிற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 10 பாடல்களைக் கொண்டது.
  17. நூற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 100 பாடல்களைக் கொண்டது.
  18. பதிற்றுப்பத்தந்தாதி என்றால் என்ன? 100 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒவ்வொரு சந்தத்தில் அமைவது.
  19. பதிற்றுப்பத்தந்தாதியின் மற்றொரு பெயர் யாது? பல்சந்தமாலை
  20. கலியந்தாதி என்றால் என்ன? பாடல்தோறும் 32 கலைவைப்பு அமைய 30 பாடல்களைக் கொண்டது.
  21. சிலேடையந்தாதி என்றால் என்ன? இருபொருள் அமைய 100 பாடல்களால் பாடுவது.
  22. யமக அந்தாதி என்றால் என்ன? வந்த சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வந்து ஒவ்வொரு அடியிலும் பொருள் மாறுபடுவது.
  23. நீரோட்டக யமக அந்தாதி என்றால் என்ன? உதடுகள் இரண்டும் ஒட்டாமல் பாடும் 100 பாடல்களைக் கொண்டது.
  24. ஒலியந்தாதி என்றால் என்ன? ஓரடிக்கு 16 கலை என்று 4 அடிக்கு 64 கலைகள் அமைவது. சந்தம், வண்ணம் நிறைந்து வருவது. 30 பாடல்கள் கொண்டது.
  25. திரிபந்தாதி என்றால் என்ன? ஒரு பாடலில் 4 அடிகளில் முதல் எழுத்து மட்டும் மாறி பிற எழுத்துக்கள் மாறாமல் ஒத்து அமைவது.
  26. கோவை என்றால் என்ன? தலைவன் தலைவி களவு வாழ்க்கையில் ஈடுபட்டு, பின் கற்பில் இல்லறம் நடத்தும் நிகழ்ச்சியைக் கோர்வையாகக் கூறுவது.
  27. கோவையின் வேறு பெயர்? அகப்பொருட் கோவை, ஐந்திணைக் கோவை
  28. "ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ/ முந்திய கலித்துறை நானூறென்ப" எனக் கோவைக்கு இலக்கணம் கூறும் நூல் எது? பன்னிருபாட்டியல்
  29. கோவைக்கான பாவகை யாது? கட்டளைக் கலித்துறை [400 பாடல்களால் ஆனது.]
  30. கோவையின் பிரிவுகள் யாவை? 33 கிளவிகளையும், பல துறைகளையும் கொண்டது.
  31. கோவையின் வகைகள் யாவை? ஒரு துறைக் கோவை, பலதுறைக் கோவை
  32. முதல் கோவை நூல் யாது? பாண்டிக்கோவை
  33. பாண்டிக்கோவையில் பாண்டி என்பவர் யார்? நின்றசீர் நெடுமாறன்
  34. பாண்டிக்கோவை எந்த இலக்கண நூலுக்கான எடுத்துக்காட்டாக உள்ளது? இறையனார் அகப்பொருள்
  35. பாண்டிக்கோவையின் காலம் யாது? எட்டாம் நூற்றாண்டு
  36. மாணிக்க வாசகர் பாடிய கோவை நூல் யாது? திருக்கோவையார் [திருச்சிற்றம்பலக் கோவை] இதனை முதல் கோவை என்போரும் உண்டு.
  37. நம்பியகப்பொருளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த கோவை நூல் யாது? தஞ்சைவாணன் கோவை
  38. தஞ்சைவானன் கோவையின் ஆசிரியர் யார்? பொய்யாமொழித்தேவர்
  39. ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல்? குலோத்துங்கன் கோவை
  40. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய கோவை நூல்? திருக்குற்றாலக் கோவை
  41. மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய கோவை நூல் எது? திருவாரூர்க் கோவை

No comments:

Post a Comment