Wednesday, September 15, 2021

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சடிக்கப்படுகிறது?

  • இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் தயாரித்து வெளியிடப்பட்டது.
  • 1935-ல் பணப் பொறுப்புகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது.
  • 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.
  • ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க தொடங்கியது.
  • மத்தியபிரதேசத்தில் உள்ள தேவாஸில் (Security Printing and Minting Corporation of India Ltd.,) 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
  • இந்த இரு அச்சகங்களைத் தவிர, 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்கத்தில் உள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க இயலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed