Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - குண்டலகேசி

குண்டலகேசியின் உருவம்:

  • ஆசிரியர் = நாதகுத்தனார்
  • காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = பௌத்தம்

பெயர்க்காரணம்:

  • துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.

நூலின் வேறு பெயர்கள்:

  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

பொதுவான குறிப்பு:

  • சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
  • புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.

மேற்கோள்:

  • பாளையாம் தன்மை செத்தும்
    பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும்
    காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே
    மேல்வரும் மூபுன் ஆகி
    நாளும் நாள் சாகின்றோமால்
    நமக்கு நாம் அழாதது என்னோ

 

No comments:

Post a Comment