Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - குண்டலகேசி

குண்டலகேசியின் உருவம்:

  • ஆசிரியர் = நாதகுத்தனார்
  • காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = பௌத்தம்

பெயர்க்காரணம்:

  • துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.

நூலின் வேறு பெயர்கள்:

  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

பொதுவான குறிப்பு:

  • சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
  • புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.

மேற்கோள்:

  • பாளையாம் தன்மை செத்தும்
    பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும்
    காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே
    மேல்வரும் மூபுன் ஆகி
    நாளும் நாள் சாகின்றோமால்
    நமக்கு நாம் அழாதது என்னோ

 

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News