Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - வளையாபதி

வளையாபதியின் உருவம்:

  • ஆசிரியர் = தெரியவில்லை
  • காலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு
  • பாவகை = விருத்தப்பா
  • பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
  • சமயம் = சமணம்

பொதுவான குறிப்புகள்:

  • நூல் முழுவதும் கிடைக்கவில்லை
  • 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
  • இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
  • நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.
  • வளையாபதியின் கதையை வைசிய புராணம் கூறுகிறது

மேற்கோள்:

  • கள்ளன்மின் களவு ஆயின யாவையும்
    கொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம்
  • பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,
    மேவத் துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை

No comments:

Post a Comment