Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - மணிமேகலை

மணிமேகலையின் உருவம்:

  • ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
  • அடிகள் = 4755 வரிகள்
  • காதைகள் = 30
  • பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
  • சமயம் = பௌத்தம்

நூலின் வேறு பெயர்கள்:

  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்
  • இயற்றமிழ்க் காப்பியம்
  • துறவுக் காப்பியம்

ஆசிரியர் குறிப்பு:

  •  மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
  • கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
  • இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.

நூல் குறிப்பு;

  • இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
  • முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
  • முதல் காதை = விழாவறைக் காதை
  • இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை

கதை மாந்தர்:

  • மணிமேகலையின் தோழி சுதமதி
  • புத்தத்துறவி அறவன அடிகள்
  • மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
  • மனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
  • மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
  • கோவலனின் குலதெய்வம் மணிமேகலை

பொதுவான குறிப்புகள்:

  • இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை
  • இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
  • பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை
  • சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
  • மணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
  • கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
  • தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.
  • திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்

மேற்கோள்:

  • வினையின் வந்தது வினைக்கு விளைவாது
    புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
    மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
  • கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
    கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்
  • பசிப்பிணி என்னும் பாவி
  • மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
  • இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
  • அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
    மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
    உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
    கண்டது இல்லென காவலன் உரைக்கும்

No comments:

Post a Comment