Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் உருவம்:
  • ஆசிரியர்   = இளங்கோவடிகள்
  • காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
  • அடிகள் = 5001
  • காதைகள்     = 30
  • காண்டங்கள்   = 3
  • பாவகை  = நிலைமண்டிலஆசிரியப்பா
  • சமயம் = சமணம்
உரைகள்:
  • அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர்அரும்பத உரைகாரர்.
  • அடியார்க்குநல்லாரின் உரை
  • ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர்            = இளங்கோவடிகள்
  • பெற்றோர்      = இமயவரம்பன்நெடுஞ்சேரலாதன்சோழன் மகள் நற்சோனை
  • அண்ணன்      = சேரன் செங்குட்டுவன்
  • இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.
நூலின் வேறு பெயர்கள்:
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்டபாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த்தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்
நூல் அமைப்பு:
  • காண்டங்கள்      = 3(புகர்ர் காண்டம்மதுரைக் காண்டம்வஞ்சிக் காண்டம்)
  • காதைகள்     = 30
  • முதல் காதை = மங்கலவாழ்த்துப்பாடல்
  • இறுதி காதை  = வரந்தருகாதை
புகார் காண்டம்:
  • புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
  • பத்தாவது காதை = நாடுகாண் காதை
மதுரைக் காண்டம்:
  • மதுரைக்காண்டத்தில் உள்ள காதை = 13
  • 11வது காதை = காடுகாண் காதை
  • 23வது காதை = கட்டுரைக் காதை
வஞ்சிக் காண்டம்:
  • வஞ்சிக்காண்டத்தில் உள்ள காதை = 7
  • 24வது காதை = குன்றக்குரவை காதை
  • 30வது காதை = வரந்தருகாதை
நூல் எழுந்த வரலாறு:
  • மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள்சேரன் செங்குட்டுவன்சீத்தலைசாத்தனார்ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
  • சீத்தலைசாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறிஅக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
  • சீத்தலைச்சாதனார்ர்இளங்கோவடிகளை “முடிகெழுவேந்தர்மூவர்க்கும் உரியதுஅடிகள் நீரேஅருளுக” என வேண்டிக்கொண்டார்.
  • இளங்கோவடிகளும், “நாட்டதும்யாமோர்பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தைபடைத்தார்.
நூல் கூறும் மூன்று உண்மைகள்:
  • ஊழ்வினை உறுத்துவந்துஊட்டும்
  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
  • உரைசால்பத்தினிக்குஉயர்ந்தோர்ஏத்துவர்
கதை மாந்தர்கள்:
  • கோவலனின் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
  • கோவலனின் தோழன் மாடலன்
  • கண்ணகியின் தோழி தேவந்தி
  • மாதவியின் தோழி சுதமதிவயந்தமாலை
  • கோவலனுக்கும்மாதவிக்கும்பிறந்தவள் = மணிமேகலை
  • கண்ணகி கோவில் கட்டியவன்சேரன் செங்குட்டுவன்
  • கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
  • சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்
சிறப்புகள்:
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.
  • சிலபதிகாரச்செய்யுளைக்கருதியும்........தமிழ்ச்சாதியைஅமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
  • யாமறிந்தபுலவரிலேகம்பனைப்போல்வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில்யாங்கணமேபிறந்ததில்லை” என்றார் பாரதியார்
  • முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
மேற்கோள்:
  • மாசறுபொன்னேவலம்புரி முத்தே
    காசறுவிரையேகரும்பேதேனே
    அரும்பெறல்பாவாய்ஆருயிர் மருந்தே
    பெருங்குடி வாணிகன் பெருமடமகளே
    இன்துணைமகளிர்க்குஇன்றியமையாக்
    கற்புக்கடம்பூண்டஇத்தெய்வம் அல்லது
    பொற்புடைத் தெய்வம்
  • பஃறுளியாற்றுடன்பன்மலைஅடுகத்துக்
    குமரிக்கோடும்கொடுங்கடல் கொள்ள

No comments:

Post a Comment