Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 02

1. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை

2. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90

3. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை

4. அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

5 .அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்

6 .அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை

7. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

8. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

9. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

10. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

No comments:

Post a Comment