Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 8, 2022

TNPSC GROUP 2 , 2A (தமிழ் ) மாதிரி வினா விடைகள் - 02

01. 'கல்வி கரையில் கற்பவர் நாள்சில' என்ற பாடல் அடி இடம் பெற்ற நுால் எது?

A) திருக்குறள்

B) பழமொழி நானூறு

C) நாலடியார்

D) நான்மணிக்கடிகை

02. அடி நிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதியால் அறம், பொருள், இன்பத்தைப் பாடுவது என்று இதன் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல் கூறுகிறது.

A) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

B) பதினெண் மேல்கணக்கு நூல்கள்

C) A மற்றும் B

D) எதுவுமில்லை

03. கீழ்க்கண்டவைகளில் 'காப்பியம்" என்பதன் பொருளைக் குறிப்பது

A) தனிப்பாடல்

B) பொருட் தொடர்நிலைச் செய்யுள்

C) தொகைநுால்

D) எதுவுமில்லை

04. போருக்குக் காரணம் பொறாமை என்று கூறும் காப்பிய நுால் எது?

A) சூளாமணி

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) நீலகேசி

05. சக்கர வாளக் கோட்டம் என்பதன் பொருள் என்ன?

A) அமுத சுரபி

B) தரும சாலை

C) புத்த பீடிகை

D) சுடுகாடு

06. முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நுால் செய்தவர் இளங்கோவடிகள் என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) மு.வரதராசனார்

C) சத்தலைச்சாத்தனார்

D) பாரதிதாசன்

07. உதயணனுக்கு 'விச்சை வீரன்' என்ற வேறு பெயரும் உண்டு. விச்சை வீரன்' என்பதன் பொருள் என்ன?

A) இசைக்கலையில் வல்லவன்

B) போர்க்கலையில் வல்லவன்

C) பலகலை வல்லவன்

D) ஓவியக்கலையில் வல்லவன்

08. கண்ணகிக்குக் கோயில் உள்ள ஊர் எது?

A) திருவாஞ்சிக்களம்

B) கலிங்க நாடு

C) ஒங்கபுரம்

D) கோவலன் பொட்டல்

09. சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?

A) சதாசிவப் பண்டாரத்தார்

B) முதலாம் ஆதித்தன்

C) நம்பியாண்டார் நம்பி

D) நாதமுனி

10. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று புகழ்ந்தவர் யார்?

A) ஆதிசங்கரர்

B) அப்பர்

C) சேக்கிழார்

D) சுந்தரர்

12. பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஆழ்வார் யார் ?

A) பொய்கையாழ்வார்

B) பூதத்தாழ்வார்

C) பேயாழ்வார்

D) பெரியாழ்வார்

No comments:

Post a Comment