Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 16, 2022

TNPSC பொதுத்தமிழ் – அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

  • அகத்தியர் – குறுமுனி
  • இளம்பூரணர் – உரையாசிரியர்,vஉரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
  • நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
  • கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
  • திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்
  • திருஞானசம்பந்தர் – தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை
  • திருநாவுக்கரசர் – அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்
  • சுந்தரர் – வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
  • மாணிக்கவாசகர் – அழுது அடியடைந்த அன்பர்
  • சேக்கிழார் – அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்
  • பெரியாழ்வார் – பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
  • ஆண்டாள் – சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை
  • நம்மாழ்வார் – சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்
  • குலசேகராழ்வார் – கூடலர்கோன், கொல்லிகூவலன்
  • திருமங்கையாழ்வார் – பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
  • திருமழிசையாழ்வார் – திராவிட ஆச்சாரியார்
  • தொண்டரடிப் பொடியாழ்வார் – விப்பிரநாராயணன்
  • நம்பியாண்டார் நம்பி – தமிழ் வியாசர்
  • ஒளவையார் – தமிழ் மூதாட்டி
  • திருமூலர் – முதல் சித்தர்
  • கம்பர் – கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
  • சீத்தலைச் சாத்தனார் – தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன்
  • திருத்தக்கத் தேவர் – தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
  • புகழேந்தி – வெண்பாவிற் புகழேந்தி
  • மீனாட்சி சுந்தரம் பிள்ளை – மகாவித்வான்
  • திரிகூட ராசப்பக் கவிராயர் – திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை – நீதியரசர்
  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் – அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
  • இராமலிங்க அடிகளார் – வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள்ää சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
  • பாரதிதாசன் – புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்
  • இரட்டைப்புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்
  • உ.வே. சாமிநாதய்யர் – தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
  • பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை
  • சிவப்பிரகாசர் – கற்பனைக் களஞ்சியம்
  • வெ.ராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர்
  • பெருஞ்சித்திரனார் – பாவலரேறு
  • அழ.வள்ளியப்பா – குழந்தைக் கவிஞர்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் – திரு.வி.க. தமிழ்த்தென்றல்
  • புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்
  • சோமசுந்தர பாரதியார் – நாவலர்
  • இராபர்ட் – டி – நொபிலி – தத்துவ போதகர்
  • வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற் கலைஞர்
  • வால்டர் ஸ்காட் – உலகச் சிறுகதையின் தந்தை
  • இராசா.அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்
  • டி.கே.சி. – ரசிகமணி
  • தேவநேயப் பாவாணர் – மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள்
  • உடுமலை நாராயண கவி – பகுத்தறிவுக் கவிராயர்
  • அஞ்சலையம்மாள் – தென்நாட்டின் ஜான்சிராணி
  • அம்புஜத்தம்மாள் – காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
  • கந்தசாமி – நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
  • சங்கரதாசு சுவாமிகள் – நாடகத் தமிழ் உலகின் இமயமலைää தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
  • வை.மு.கோபாலகிரு~;ணமாச்சாரியார் – பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
  • பரிதிமாற்கலைஞர் – திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
  • பம்மல் சம்பந்தனார் – தமிழ் நாடகத் தந்தை
  • ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்பஸான்
  • வாணிதாசன் – தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
  • அநுத்தமா – தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
  • கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை – முத்தமிழ்க் காவலர்
  • டி.கே.சண்முகம் சகோதரர்கள் – தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
  • இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர்
  • வ.உ.சிதம்பரனார் – கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
  • ஈ.வெ.ரா.ராமசாமி – பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர்
  • இராஜாஜி – மூதறிஞர்
  • நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் – காந்தியக்கவிஞர்
  • காமராஜர் – பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
  • அருணகிரிநாதர் – சந்தக்கவி
  • பொ.வே.சோமசுந்தரனார் – பெருமழைப்புலவர்
  • மு.கதிரேசச் செட்டியார் – மகோமகோபாத்தியாய, பண்டிதமணி
  • கருமுத்து தியாகராசச்செட்டியார் – கலைத்தந்தை
  • ஆறுமுக நாவலர் – பதிப்புச் செம்மல்
  • சி.பா. ஆதித்தனார் – தமிழர் தந்தை
  • கா. அப்பாத்துரையார் – பன்மொழிப்புலவர்
  • பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் – பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
  • ம.பொ.சிவஞானம் – சிலம்புச் செல்வர்
  • சுந்தர ராமசாமி – பசுவய்யா
  • மாதவய்யர் – கோணக் கோபாலன்
  • வேங்கடரமணி – தென்னாட்டுத் தாகூர்
  • சுரதா – உவமைக் கவிஞர்
  • கண்ணதாசன் – காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
  • கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
  • சுஜாதா – தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
  • கி.வா. ஜெகநாதன் – தமிழறிஞர்
  • அண்ணாதுரை – பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷோ
  • வி.முனுசாமி – திருக்குறளார்
  • பாலசுப்ரமணியம் – சிற்பி
  • நா. காமராசன் – வானம்பாடிக் கவிஞர்
  • ஸ்ரீவேணுகோபாலன் – புஷ்பா தங்கதுரை
  • ஆத்மாநாம் – எஸ்.கே.மதுசூதன்
  • என்.எஸ்..கிருஷ்ணன் – கலைவாணர்
  • எம்.ஜி.ராமச்சந்திரன் – மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி
  • மு. கருணாநிதி – கலைஞர்
  • எம்.ஆர்.ராதா – நடிகவேள்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக்குயில்
  • செய்குத்தம்பி பாவலர் – கற்பனைக் களஞ்சியம்
  • வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
  • அண்ணாமலை ரெட்டியார் – அண்ணாமலை கவிராஜன்
  • திரு.வி.க. – தமிழ் உரைநடையின் தந்தை
  • வைரமுத்து – கவிப்பேரரசு
  • வா.செ.குழந்தைசாமி – குலோத்துங்கன்
  • அப்துல் ரகுமான் – கவிக்கோ

No comments:

Post a Comment