Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

பக்தி இலக்கிய வரிகள்

"தோடுடைசெவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே"

[திருஞானசம்பந்தர் - முதல் பாடல்]


"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே"

[திருஞானசம்பந்தர் - கோளறு பதிகம்]


"கூற்றாயினவாறு விலக்ககலீர்
கொடுமை பல செய்தன நானறிவேன்"

[திருநாவுக்கரசர் - முதல் பாடல்]


"மாசில்வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"

[திருநாவுக்கரசர் - சுண்ணாம்புக்காளவாசலில் வீசப்பட்ட போது]

"சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றூணைப் பூட்டியோர் கடலிலே பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே"

[திருநாவுக்கரசர்- கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட போது]


"தலைகொள் நஞ்சமுதாக விளையுமே
தழல்கொள் நீறுதடாகமது ஆகுமே
கொலைசெய் யானை குனிந்து பண்யுமே
கோளரா வின்கொடு விடம் தீருமே"

[திருநாவுக்கரசர் - பல்லவ மன்னனால் அடைந்த துன்பங்கள்]

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டா:
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

[திருநாவுக்கரசர் - அகத்துறைப் பாடல்]

"பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே"

[சுந்தரர் - முதல் பாடல்]

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் சென்சட மேல்மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே"

[சுந்தரர்]

"பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனுடை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உவப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்த ருளுவது இனியே"

[மாணிக்கவாசகர்]

"தேனுக்குள் இன்பம் சிவப்போ? கறுப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"

[திருமூலர்]


"ஒன்றே குலமே ஒருவனே தேவன்"
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
"நன்றே நினைமின் நமனில்லை"
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"

[திருமூலர்]

"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம்"

"அறிவானும் தானே: அறிவிப்பான் தானே:
அறிவாய் அறிகின்றான் தானே; விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்"

[காரைக்கால் அம்மையார்]

"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று"

[பொய்கையாழ்வார்]

"இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழில் நல்வேன் பெரிது"

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"

[பூதத்தாழ்வார்]

"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"

[பேயாழ்வார்]

"மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையமளந்தானே! தாலேலோ!

[பெரியாழ்வார்]

"கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவள செவ்வாய்தான் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே"

[ஆண்டாள்]

No comments:

Post a Comment