Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 19, 2023

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை..!


சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.

காஸ்டஸ் இக்னியஸ் என்ப்படும் இன்சுலின் செடி இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின் மற்றும் கார்சோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. நீரிழிவு தவிர, இது நுரையீரல், செரிமானம் மற்றும் கண்களுக்கும் நன்மை பயக்கும்.

மா இலைகளும் நன்மை பயக்கும்

இது தவிர மா இலைகளும் நீரிழிச்வு நோயை கட்டுப்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கொய்யா இலைகளும் நீரிழிவுக்கு மாமருந்து

கொய்யா இலைகளில் உள்ள ஆல்பா குளுக்கோசிடேஸைத் தடுக்கிறது. என்வே இது நீரிழுவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது கொய்யா இலைகளை காலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

No comments:

Post a Comment